Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 12 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, ரீ.கே.றஹ்மத்துல்லா
சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்தபோது, கடல் அலையில் சிக்குண்டுச் சென்ற இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள அதேவேளை, மற்றொரு மாணவன் காணாமல் போயுள்ளார்.
சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில் நேற்றுச் சனிக்கிழமை மாலை வேளையில், கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் நீராடிக் கொண்டிருந்தபோது, இருவர் கடல் அலையில் சிக்குண்டு, தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இன்னும் மூன்று மாணவர்கள் பாதிப்பு எதுவுமில்லாமல் கடலில் இருந்து வெளியேறி, வீடு போய் சேர்ந்துள்ளனர்.
சாய்ந்தமருது-11 ஆம் பிரிவை சேர்ந்த முஹம்மட் லத்தீப் முஹம்மட் இன்ஸாத் (வயது-16) எனும் மாணவனே காணாமல் போயுள்ளார்.
இவரைத் தேடும் பணிகளை, மீனவர்களின் உதவியுடன் குடும்பத்தினர் முன்னெடுத்து அதேவேளை, கல்முனை பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago