2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

Janu   / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டப் பகுதியில் இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் செவ்வாய்க்கிழமை (09) ஏற்பட்ட தகராறு பின்னர் கத்திக்குத்தாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்தவருக்கும் அவருடைய முன் வீட்டில் வசித்து வந்த நபருக்கும்  இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் தகராறாக மாறியதில் கூறிய ஆயுதங்களினால் ஒருவரை ஒருவர் தாக்கியதில்  அலாவுதீன் ரிஷாத்    உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  இந்த சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட விசேட தடயவியல் பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 ஏ.எல்.எம்.ஷினாஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X