2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கனியவள அகழ்வுகளைத் தடுக்க ஜனாதிபதி உறுதி

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இல்மனைட் போன்ற கனியவள அகழ்வுகள் தடுக்கப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கினாரென, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

 

நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற 2018ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் கமத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி, நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவம், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தான் உரையாற்றியதன் பிற்பாடு, அழைத்த ஜனாதிபதி, இவ்வாறு குறிப்பிட்டதாகக் கூறினார்.

குறித்த விடயம் தொடர்பில் தான் உடனடி கவனம் செலுத்துவதாகவும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எவ்வித நடவடிக்கையையும் தான் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .