2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கல்முனையிலிருந்து கதிர்காமத்துக்கு விசேட பஸ் சேவை

Suganthini Ratnam   / 2017 ஜூலை 16 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல்; கல்முனையிலிருந்து கதிர்காமத்துக்கு விசேட இ.போ.ச பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என,  கல்முனைச் சாலையின் முகாமையாளர் வி.ஜௌபர், இன்று தெரிவித்தார்.

கதிர்காமத் தீர்த்தோற்சவம் முடிவடையும்வரை ஓகஸ்ட் 8ஆம் திகதிவரை இப்பஸ் சேவை இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

தினமும் காலை 6 மணிக்கு கல்முனையிலிருந்து  கதிர்காமம் நோக்கிப் புறப்படுவதற்கு இப்பஸ் சேவையின் ஒருவழிக் கட்டணம் 430 ரூபாயாகும்.

இந்நிலையில், மட்டக்களப்பிலிருந்து 490 ரூபாயும், களுவாஞ்சிக்குடியிலிருந்து 450 ரூபாயும், அக்கரைப்பற்றிலிருந்து 390 ரூபாயும், பொத்துவிலிலிருந்து 310 ரூபாயும்;, பாணமையிலிருந்து 270 ரூபாயும் கதிர்காமத்துக்கான ஒருவழிக் கட்டணமாக அறவிடப்படும் எனவும் அவர் கூறினார்.
முற்கூட்டிய ஆசனப் பதிவை பயணிகள் மேற்கொள்ள முடியும் என்பதுடன்,  முற்கூட்டி குழுவாகப் பதிவு செய்தால், தனி பஸ்ஸை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பஸ்;கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
தீர்த்தத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களை மீண்டும் அழைத்துவரவும் கூடுதலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர்;; தெரிவித்தார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .