Editorial / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, அஸ்லம் எஸ்.மௌலானா, ஏ.எல்.எம்.ஷினாஸ், எஸ்.எல். அப்துல் அஸீஸ்
கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்குமாறு கோரி, கல்முனை மக்கள் அமைதிப் பேரணியும் ஒன்றை நடத்தியுள்ளதுடன், கல்முனை பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கைள் அடங்கிய மகஜரையும் இன்று (31) கையளித்தனர்.
அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பொது நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்த இந்த மக்கள் அமைதிப் பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள், கல்முனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக ஒன்று கூடி, பிரதான வீதியூடாக கல்முனை பிரதேச செயலகம் சென்று தமது கோரிக்ககைள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
இக்கோரிக்கைள் அடங்கிய மகஜரை மாவட்ட செயலாளர், அமைச்சர்கள். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் வகையில் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பொது நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸால் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கணியிடம் கையளித்தனர்.
கல்முனையை பிரிப்பதாயின் 1987ஆம் ஆண்டு இருந்தவாறு ஏக காலத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளாகப் பிரிக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று (31) இரண்டாவது நாளாகவும் கடையடைப்பும், ஹர்தாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் அரச சேவைகள், வங்கிகள், பாடசாலைகள் மற்றும் சந்தைகள் என்பன இயங்காமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதனால் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் அச்சமான நிலை தோன்றியுள்ளதுடன், நாளை முதலாம் திகதியும் சாய்ந்தமருது மக்கள் இதனைத் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர்.

4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago