Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
நடராஜன் ஹரன் / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஊருக்கு ஒரு கோடி மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான காசோலைகளைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில், ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், குறித்தத் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீடமைப்பு, சைக்கிள் தரிப்பிடம், இந்து ஆலய நிர்மாணிப்பு வேலைகளுக்கான முதற்கட்டக் கொடுப்பனவாக தலா ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் அவ்வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் ஏழு இளைஞர் கழகங்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
29 Apr 2025
29 Apr 2025