2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

காரின் மீதேறி கெப் விபத்து: நால்வர் காயம்

Editorial   / 2024 மார்ச் 25 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மூவாங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹிகுரானையிலிருந்து அம்பாறை நோக்கி கெப் வண்டி சென்றதுடன், கார் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

கெப் வண்டியின் டயர் ஒன்றில் காற்று இல்லாமற் போய்விட்டது. இதனையடுத்து சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போய், காரின் மேல் ஏற்றிவிட்டார் என அறியமுடிகின்றது.

இந்த சம்பவத்தில், கெப் வண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X