Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
களவு கொள்ளை பிறரின் உடமை அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும் வீதிகளில் கண்டெடுக்கப்படும் பெறுமதியான தனக்கு உரித்தில்லாத பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் மனிதர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இவ்வாறான சிறப்பு சம்பவமொன்று அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று பஸ் நிலையத்தின் அருகாமையில் நடந்து சென்ற கோயில் வீதி ,திருக்கோவில் 01 இனை சேர்ந்த அன்ரி மலேரியா ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் கணபதிப்பிள்ளை கார்த்திகேசு என்பவர் தங்க மாலையொன்று மற்றும் மோதிரம் ஒன்றினையும் கண்டெடுத்துள்ளார்.
இதன்போது அருகில் இருந்த இன்னுமொருவர் அது தன்னுடையது என கூறி பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அதனை உரியவரிடமே ஒப்படைக்க வேண்டும் என கூறி அக்கரைப்பற்று பொலிஸாரிடம் விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸாரால் நகையினை மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து மோதிரத்தை ஒப்படைத்த கார்த்திகேசுவை பாராட்டி நன்றியினை தெரிவித்துள்ளனர்.
வி.சுகிர்தகுமார்
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago