2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சூது விளையாடியவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.ஜமால்டீன், கனகராசா சரவணன் 

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரைப் பகுதியில் சூது விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 18 பேருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம்.பஸீல் புதன்கிழமை (23), தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

குறித்த நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்த முறைப்பாட்டினையடுத்து அக்கரைப்பற்று விசேட பொலிஸ் குழுவினர், இன்று (23) அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவின் தேநீர் கடையொன்றில் இருந்து சூது விளையாடிக் கொண்டிருந்த போது அவர்களை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X