2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுவனின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 02 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில், கொட்டுக்கல் களப்புப் பிரதேசத்தில் நீரில் மூழ்கி, அப்துல்லாஹ் சுதைஸ் (வயது-14) எனும் சிறுவன் பலியாகியுள்ளாரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது குடும்ப உறவினர்களுடன் நேற்று முன்தினம் (31) கொட்டுக்கல் களப்பு பிரதேசத்துக்குச் சிறுவன் சென்றிருந்த வேளையில், இரு சிறுவர்கள் சிறிய வள்ளம் ஒன்றில் களப்பில் சென்ற போது, யானை வருவதாக உடன் சென்ற சிறுவன் கூறியதையடுத்து, பீதியால் களப்பில் குதித்த சிறுவன் காணாமல் போயிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன சிறுவனின் சடலம், நேற்று (01) காலை கொட்டுக்கல் களப்பு பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .