2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

டெங்கு அபாயத்தால் கொட்டில் அகற்றல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதேசத்தில் டெங்கு பரவக் கூடிய இடமாக அடையாளம் காணப்பட்ட பல்கலைக்கழக பிரதான முன்றலில் சைட்டத்துக்கு  எதிராகவும், பல்கலைக்கழகத்துடன் அதிருப்தியுற்ற மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த கொட்டில் அகற்றப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன், நேற்றுத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக முன்றலில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மாணவர்களால் சுலோப அட்டைகள், பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் பொலித்தீனால் அமைக்கப்பட்ட குறித்த கொட்டில், பராமரிப்பின்றி சூழல் மாசடைந்த நிலையில் அங்கு டெங்கு நுளம்பு பரவக் கூடிய குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே, இக்கொட்டில் மற்றும் பதாதைகள் என்பன அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .