2025 மே 05, திங்கட்கிழமை

திருக்கோவிலில் 22 கிராமிய குழுக்கள் அமைப்பு

Princiya Dixci   / 2021 மே 30 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக அங்குள்ள 22 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கிராம மட்ட கொரோனா விழிப்புணர்வுக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இங்கு இருவகையான கிராம மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன.

அரசஅறிவுறுத்தலுக்கமைவாக, 22 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தலா 7 பேர் கொண்ட 22 கொரோனா விழிப்புணர்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன.

அதேவேளை, 22 பிரிவுகளிலும் கோவில் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், சமூகசேவையாளர்கள் என சமூகமட்ட தலைவர்கள் 10 பேரைக் கொண்டதாக மற்றும் 22 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 374 பேருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X