Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
நாட்டில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்து பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது என அட்டாளைச்சேனை பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எம். முனவ்வர் தெரிவித்தார்.
போசாக்கு உணவு தொடர்பாக கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம். ஜௌபர் தலைமையில் இன்று (10) சனிக்கிழமை அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்;.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சிறந்த அறிவுத் திறனுடைய சமுதாயத்தை உருவாக்குவதற்கு தேவையான போசாக்குள்ள உணவுகளை நாம் எப்போதும் உட்கொள்ள வேண்டும்.
இதனை நீங்கள் பின்பற்றி இதன் மூலம் நாட்டில் ஆரோக்கியமான சமுகம் உருவாகுவதற்கு செயற்பட வேண்டும். கேடான உணவுகளை உண்பதன் மூலம் நாம் சிறந்த சுகதேகிகளாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு மற்றவர்;களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்த கூடியவர்;களாக ஆகிவிடுவோம்.
உணவகங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணாமல் எமது வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் போசாக்கான உணவுகளை நாம் உண்ணக் கூடியவர்களாக மாற வேண்டும்.
எனவே, நாட்டில் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் அதிபர் ஏ.எல். கிதுறு முகம்மட், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல். ஹாசிம், பொதுச் சுகாதரா பரிசோதகர்;களும், சுகாதார உத்தியோகத்தர்;களும் கலந்துகொண்டனர்;.
40 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
1 hours ago