Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டமானது நான்கம்சக் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படவுள்ளது எனக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
'வாருங்கள் தமிழர்களே! தோல் கொடுப்போம் தொழிலாளர்களுக்கு', 'தமிழ் மக்களின் உரிமையை உறுதிப்படுத்துவோம்', 'இலங்கையில்; பாராபட்சமின்றி சமத்துவம், சமாதானம் ஏற்பட உழைப்போம்', 'தொழிலாளர்களின் வாழ்வு வளம் பெற கை கொடுப்போம' என்பனவே நான்கம்சக் கோரிக்கையாகும்.
த.தே.கூ.வின் மே தினக் கூட்டம், ஆலையடிவேம்பில் தர்மசங்கரி விளையாட்டுத் திடலில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்றது. இக்கூட்டத்துக்கு யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆதரவாளர்கள் என சுமார் 5,000 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களின் போக்குவரத்துக்காக 25 பஸ்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago