2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நான்கம்சக் கோரிக்கையை முன்வைத்து த.தே.கூ.வின் மே தினக் கூட்டம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டமானது  நான்கம்சக் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படவுள்ளது எனக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

'வாருங்கள் தமிழர்களே! தோல் கொடுப்போம் தொழிலாளர்களுக்கு', 'தமிழ் மக்களின் உரிமையை உறுதிப்படுத்துவோம்', 'இலங்கையில்; பாராபட்சமின்றி சமத்துவம், சமாதானம் ஏற்பட உழைப்போம்', 'தொழிலாளர்களின் வாழ்வு வளம் பெற கை கொடுப்போம' என்பனவே நான்கம்சக் கோரிக்கையாகும்.

த.தே.கூ.வின் மே தினக் கூட்டம்,  ஆலையடிவேம்பில் தர்மசங்கரி விளையாட்டுத் திடலில்  இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகின்றது. இக்கூட்டத்துக்கு யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆதரவாளர்கள் என சுமார் 5,000 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.  இவர்களின் போக்குவரத்துக்காக 25 பஸ்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .