Suganthini Ratnam / 2016 ஜனவரி 27 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா, எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது இரண்டாம் பிரிவு கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவின் சுற்றுவேலியை இனந்தெரியாதோர் சிலர் உடைத்து விழுத்தியுள்ளதுடன், அங்கிருந்த உபகரணங்களையும் அகற்ற முயற்சித்துள்ளமை தொடர்பில் பொலிஸில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து இப்பகுதியில் புனர்நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேச தொண்டு நிறுவனமொன்றினால், இந்தச் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago