2025 ஜூன் 28, சனிக்கிழமை

போதையில் வாகனம் செலுத்தியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு, 15 நாட்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 25,500 ரூபாய் அபராதமும் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய எச்.எம்.எம். பஸீல், இன்று திங்கட்கிழமை (05) உத்தரவிட்டார்.  

அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்தே இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். நீதவான் முன்னிலையில் இன்று இவரை ஆஜர்படுத்திய போதே நீவதான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 

இதேவேளை, ஒலுவில் பிரதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10,000 ரூபாய் அபராதமும் நீதவானால் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .