2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பொறிவெடிகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எஸ்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மணிகுளப் பிரதேசத்தில் விலங்குகளுக்கு வைப்பதற்கான  13 பொறிவெடிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 32 வயது மதிக்கத்தக்க இரண்டு பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து பொறிவெடிகளைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி  பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இவ்விருவரிடமும் பொலிஸார் விசாரணை செய்தனர். இதன்போது இவர்களிடம் பொறிவெடிகள் இருந்தமை தெரியவந்துள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X