எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 நவம்பர் 30 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல்முனை பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பால்மா பக்கெட்டுகள், செவ்வாய்க்கிழமை (28) இரவு கைப்பற்றப்பட்டுள்ளனவென, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு பெட்டியில் 400 கிராம் பால்மா பக்கெட்டுகள் 36 அடங்கிய 89 பெட்டிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த பால்மா பக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டு உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பால்மா பக்கெட்டுகள், கல்முனைப் பிரதேசத்திலுள்ள மொத்த விற்பனைக் கடையொன்றில் இருந்து கடந்த 19ஆம் திகதி களவாடப்பட்டதாக இருக்கலாமென, பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago