2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’’புனரமைப்பு திட்டத்தை ஏப்ரலுக்குள் நிறைவு செய்யவும்’’

Janu   / 2024 பெப்ரவரி 26 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைக்கும் வேலைத்திட்டத்தினை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவு செய்யுமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்புக்குழுவைப் பணித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைகள் புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான விஷேட  கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  (25) நடைபெற்றபோதே  ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இதன்போது  ,அம்பாறை மாவட்டத்தில் இதுவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புனரமைப்பு வேலைத்திட்டம் நிறைவுபெற்ற கிராமங்களில் விரைவில்   மத்திய குழுக்கள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது .

மேலும், இக்கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் .

எம்.எஸ்.எம்.ஸாகிர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X