Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜனவரி 03 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் நேற்று (02) உத்தரவிட்டார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்மாந்துறை, செந்நெல் கிராமத்திலுள்ள வீடொன்றை கடந்த வெள்ளக்கிழமை (29) மேற்கொண்ட, திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் ஒருவரும், அவரிடமிருந்து 450 கிராம் கேரளா கஞ்சாவும், 8340 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 80 ஆயிரத்தி 770 ரூபாய் பணமும் இலத்திரனியல் தராசும் கைப்பற்றப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், குறித்த சந்தேகநபரை கடந்த 03 நாட்களாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில்,நேற்று(02) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போது, நீதவான் எச்.எம்.எம். பஸீல் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
17 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
17 minute ago