Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
மாலைதீவுக் கடற்படையினரால் பாதுகாப்பாக படகுடன் மீட்கப்பட்ட 2 மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மேலும், மற்றைய படகுடன் காணாமல் போன ஏனைய 4 மீனவர்களை மாலைதீவு மற்றும் இந்திய கடற்படையினரின் டோரா படகுகள் மூலம் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு மீன்பிடி சங்கத் தலைவர் எம்.நசீர் உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள், காணாமல் போன இயந்திரப் படகு உரிமையாளர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைச்சரும் மு.கா தலைவருமான ரவூப்; ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரை நேற்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியமைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனையைச் சேர்ந்த 06 மீனவர்களுடன் கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி மீன்பிடித் தொழிலுக்காக ஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 2 இயந்திரப் படகுகள் காணாமல் போயின. அவற்றில் ஒன்று 2 மீனவர்களுடன் மாலைதீவுக் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், அவ்விரு மீனவர்களும் மாலைதீவுத் துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
10 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025