2025 மே 03, சனிக்கிழமை

மகள் கொலை:தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு

Niroshini   / 2017 ஜனவரி 07 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் மகளை அடித்துக் கொலை செய்த தாயை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த மே மாதம் செவ்வாய்க்கிழமை (31) தாய்க்கும் வளர்ப்பு மகளுக்கும் இடையில் மதம் மாறியமை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கொன்றை வெட்டி தாய் புதைத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தாய், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X