2025 மே 14, புதன்கிழமை

’மனித உரிமை மீறல்களை தொலைநகலிலும் முறையிடலாம்’

Editorial   / 2020 மே 03 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பீடித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, அரச, தனியார் நிறுவனங்களை மூடுமாறும் வீடுகளில் இருந்து அலுவலகப் பணிகளைச் செய்யுமாறும் கடந்த தினங்களில் அரசாங்கம் அறிவித்திருந்தது.

குறித்த அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகமும், ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டு, பின்னர் பகுதி அளவில் இயங்கத் தொடங்கியது.

இருப்பினும், 1996 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு, பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பதிவுசெய்த நிலையில் மேலும் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கையை இலகுபடுத்துவதற்காக 0672229728 எனும் புதிய தொலைநகல் இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் அறிவித்துள்ளார்.

எனவே, தமக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக முறைப்பாடு செய்ய விரும்புகின்றவர்கள், தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட தொலைநகல் மூலம் இலகுவில் மேற்கொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X