எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் 01 வருட கால மனையியல் டிப்ளோமா பயிற்சி நெறியைப் பயில்வதற்கு, யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதியன்று 17 வயதுக்கு குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும், தரம் 10 வரை கல்வியை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 03 வருடங்களுக்கு மேலாக வசித்து வருபவராகவும் விண்ணப்பதாரி இருத்தல் வேண்டும்.
தகமையுடைய விண்ணப்பதாரிகள், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், அட்டாளைச்சேனை எனும் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு, பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தெரிவித்தார்.
மேலதிக விவரங்களுக்கு, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் 0778846479, 0776652925 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago