நடராஜன் ஹரன் / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்முனை, பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்பு கிராமத்தில் நேற்றிரவு (08) மின்னல் தாக்கத்தினால் பல வீடுகளிலுள்ள பெறுமதியான வீட்டு மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேனைக்குடியிருப்பு சேமன் வீதியில், அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகிலிருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதுடன், அப்பகுதியில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனம், மற்றும் கணனிகள் உட்பட்ட பல பொருட்கள் சேதமந்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம் மின்னல் தாக்கத்தினால், வீடுகளிலுள்ள மின் இணைப்புக்கள் வெடித்துச் சிதறியுள்ளதுடன், மின் இணைப்புகள் செயலிழந்துள்ளதாகவும் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025