Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் வீட்டொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில், இன்று (20) ஏற்பட்ட திடீர் தீயால், அந்த முச்சக்கரவண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவின் ஹாஜியார் வீதியைச் சேர்ந்த எம்.எப்.மஸ்ரூப் என்பவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
தீ ஏற்பட்ட வேளையில் இரு சிறுவர்கள் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர். வீதியால் சென்று கொண்டிருந்தவர்களே, தீயை அவதானித்து, பின்னர் சத்தமிட்டு அயலவர்களையும் அழைத்து, தீயை அணைக்க முட்பட்ட போதிலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னரே, முச்சக்கரவண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளது.
இத்தீ, வீட்டின் மின்மானியிலும் பரவியதால் மின்சார சபையின் ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு உடன் விரைந்து மின்சாரத்தைத் துண்டித்து, பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago