2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விவசாயி கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கட்டுத்துவக்கு, துப்பாக்கித் தோட்டா மற்றும் கஞ்சா விதைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 44 வயதுடைய விவசாயி ஒருவர் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை (10) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இவரது வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது இவை கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுத்துவக்கு, துப்பாக்கித் தோட்டா மற்றும் கஞ்சா விதைகளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X