Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
அம்பாறை மாவட்ட மக்கள் வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ஏ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மக்கள் வங்கியின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகள் குறித்தும் அவர்களது நலன்களை உறுதிப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.
இதற்கிணங்க,தலைவராக எம்.ஐ.எம்.மர்சூக், உப தலைவர்களாக என்.எம்.ஈ.பண்டா, எம்.வடிவேல், செயலாளராக ஏ.எம்.ஹனிபா, உப செயலாளராக எஸ்.எம்.எம்.இப்ராஹிம், பொருளாளராக எம்.எம்.ஏ.ஹமீட், கணக்காய்வாளராக ஏ.எல்.தாஹா றபீக், அமைப்பாளராக பி.ரி.ஏ.ரஷீத், போஷகராக எஸ்.குழந்தை வடிவேல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் ஏழு பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago