Editorial / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனை - மீனோடைக்கட்டு பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பாலமுனை, உதுமாபுரத்தைச் சேர்ந்த சகாப்தீன் என்றழைக்கப்படும் அகமட்லெப்பை அப்துல் வகாப் (வயது 65) என்பவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், சைக்கிளில் அட்டாளைச்சேனையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த நீர்வழங்கல் சபைக்குச் சொந்தமான பிக்-அப் வாகனம் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பிக்-அப் வாகனம், விபத்து இடம்பெற்ற இடத்தில் நிறுத்தப்படாமல் உயிரிழந்தவரின் சைக்கிளையும் கொழுகி இழுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற போது சுமார் 4 கிலோமீற்றருக்கு அப்பால் வைத்து பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் குறித்த சாரிதி ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பதுடன் வாகனமும் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026