2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெள்ளை நிற ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்துதல்

Freelancer   / 2023 மார்ச் 02 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஒலுவில் பிரதேசத்தில் தென்னை மர ஓலைகளில் அதிகரித்துக் காணப்படும் வெள்ளை நிற ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்து தொடர்பான விழிப்புணவு, ஒலுவில் அன்சாரி ஜும்மா பள்ளிவாசலில் இன்று (02) நடைபெற்றது.

ஒலுவில் 5 மற்றும் 6ஆம் பிரிவுகளிலுள்ள பிரதேசங்களில் தென்னை மர ஓலைகளில் அதிகரித்துக் காணப்டும் வெள்ளை நிற ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்து தொடர்பாக நிந்தவூர் தென்னை பயிர்ச் செய்கை அதிகார சபை மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து, இது தொடர்பாக விளக்கமளித்தனர்.

தென்னை பயிர்ச்செய்கையின் சபை பிராந்திய முகாமையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, நிந்தவூர் தென்னை பயிர் செய்கை சபையின் அலுவலகத்தில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டரா வேப்பண்ணை போன்ற மருந்துகளினாலும் வெள்ளை நிற ஈக்களின் தாக்கத்தை காட்டுப்படுத்த முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .