2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

“அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்; சிறுவர் தொழிலாளரை ஒழிப்போம்”

R.Tharaniya   / 2025 ஜூன் 12 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு சிறுவரும் தொழிலாளி உருவாகும் போது, நாட்டின் சாதனையாளர் ஒருவர் இழக்கப்படுகின்றார். நாட்டின் எதிர்காலம் இருண்ட நிலைக்குத் தள்ளப்படுகின்றது. புத்தகப்பையைச் சுமக்க வேண்டிய வயதில் குடும்ப வறுமை காரணமாக சிறுவர் தொழிலாளியாக மாறும் குழந்தைகளின் வாழ்வு சுருண்டு போகின்றது புத்தக பை, குப்பைக்குச் சென்று விடுகின்றது.

சிறுவர் தொழிலாளர்களைத் தடுக்கவே பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO) சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கொண்டாட வலியுறுத்துகின்றது.

அன்றைய நாளில் பல்வேறான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.பாடசாலைகளில் இருந்து விலகி, வேலைகளுக்கு அதிகமான பிள்ளைகள்  அழைத்துச் செல்லப்படுவதால், மில்லியன் கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்று ஐ.நா. தொழிலாளர் அமைப்பு ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும், சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.
பணவீக்க உயர்வு மற்றும் அதைத் தொடர்ந்து வாழ்க்கைச் செலவு உயர்வு, போதியளவான உணவு கிடைக்காமை, தங்குமிட வசதி இன்மை, பெற்றோரின் வருமானம் போதாமை, ஆகியவற்றால், சிறுவர்கள் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்றுவிடுகின்றனர்.  

எனினும், குறைந்த சம்பளத்தில், கூடுதல் வேலைகளை வாங்கவும், சலுகைகள், விடுமுறைகள் வழங்காமல், எந்தநேரத்தில் வேலைக்கு அமர்த்துவதற்காக சிறுவர் தொழிலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். நமது நாட்டை பொறுத்தவரையில், வீட்டு வேலைகளில் கூடுதலான சிறுவர் தொழிலாளர்களே உள்ளனர்.

 சமீபத்திய மதிப்பீடுகளின் பிரகாரம், உலகளவில் 152 மில்லியன் சிறுவர்களில், 64 மில்லியன் பெண்கள் மற்றும் 88 மில்லியன் சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர் என்பதைக் குறிக்கிறது, இது உலகளவில் உள்ள அனைத்து சிறுவர்களில் 10இல் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

நமது நாட்டை பொறுத்தவரையில், சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்க, “அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் சிறுவர் தொழிலாளரை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், குடும்ப சுமையால், சிறுவர்கள் தொழில்களுக்கு அமர்த்தப்படுகின்றனர். இல்லையேல், தரகு பணத்தை பெற்றுக்கொள்வதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். 

சிறுவர் தொழிலாளர்களில் பலர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் சிலர், பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகியுள்ளனர். பெருந்தோட்டங்களைச் சேர்ந்த பலர், பெருநகரங்களில் வீட்டுவேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். சிலர், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டும் உள்ளனர். 

செய்ய எதுவும் இல்லாத குடும்பங்கள், இதற்கு முன்பு ஒருபோதும் எடுக்காத முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், மேலும் எதிர்மறையான சமாளிக்கும் உத்திகளை நாடுகிறார்கள். இவை குழந்தைகள் மீது உடனடி மற்றும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது உண்மையாகும்.

12.06.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .