R.Tharaniya / 2025 ஜூலை 28 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டில் ஏராளமான கல்வி சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மீண்டும் ஒரு கல்வி சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய கல்வி சீர்திருத்தம் எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் மேற்கொள்ளப்படுகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறியிருந்தார். இருப்பினும், இந்த சீர்திருத்தம் பற்றிய பேச்சுக்கு எதிராக மிகப்பெரிய அரசியல் எதிர்ப்பு எழுந்துள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தத் திட்டத்தின் உள்ளடக்கத்தை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கண்டித்துள்ளார். சிலர் சொல்வது போல், புதிய முறையின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் கட்டாயமாக இருக்காது.
அந்தப் பேச்சு ஒரு பொய் என ஹரிணி அமரசூரியவின் தெரிவித்துள்ளார். வரலாறு மற்றும் அழகியலைக் குழந்தைகள் நிச்சயமாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
1970 ஆம் ஆண்டு சமகி பெரமுன அரசாங்கத்தின் கீழ், க.பொ.த. சாதாரண தரத் தேர்வுக்கு பத்து பாடங்களைப் படிக்க வேண்டியிருந்தது. இந்த பத்து பாடங்களில் ஒன்று அல்லது இரண்டில் தேர்ச்சி பெறுவது கட்டாயமில்லை. பின்னர், தேர்ச்சி பெறக்கூடாத பாடங்களில் கவனம் செலுத்தாமல், குழந்தைகள் மற்ற பாடங்களை மட்டுமே படித்தனர்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அரிதாகவே பாடத்திட்டத்தை உருவாக்குகின்றன. ஆனால் அவர்கள் வருடத்திற்கு முந்நூற்று அறுபத்தைந்து நாட்கள் பாட மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
1970 முதல் இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த பெரும்பாலான அரசாங்கங்கள் கல்வியை ஓர் அரசியல் மைலேஜாக மட்டுமல்லாமல், அரசியல் பழிவாங்கலுக்கான கருவியாகவும் பயன்படுத்தியுள்ளன.
அதன் கதை பின்வருமாறு.
1977 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம் பண்டாரநாயக்கவைப் பழிவாங்க புதிய கல்வி முறையை மாற்றி, பழைய முறைக்குத் திரும்பியது. சந்திரிகா ஆட்சிக்கு வந்த பிறகு இந்த முறை மீண்டும் மாறியது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு இந்த முறை மாறவில்லை என்றாலும், 
நாட்டின் கல்வியின் ஆற்றலின் ஒரு பகுதி மறைந்துவிட்டது. இதற்குக் காரணம், 1977 க்குப் பிறகு இலங்கையின் கல்வியை ஆக்கிரமித்த கல்வி ஆசிரியர் சமூகம் மஹிந்தவின் காலத்தில் பெரிதாக வளர்ந்திருந்தது. 
மைத்திரிபால சிறிசேன அல்லது கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் பாடசாலை பாடங்களில் எந்த வளர்ச்சியும் இல்லை. இதற்குக் காரணம், பாடசாலை படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, இருவரும் தங்கள் கழுத்தைக் காப்பாற்றப் போராட வேண்டியிருந்தது.
நீண்ட காலத்திற்குப் பிறகுதான் ஜே.வி.பி. - என்.பி.பி. அரசாங்கம் கல்வி மறுசீரமைப்பு செய்துள்ளது. இது ஒரு பயனுள்ள நடவடிக்கை என்றால், நாங்கள் அதை வரவேற்கின்றோம்.
நவீன உலகிற்கு ஏற்றவகையில் கல்வியில் சீர்திருத்தம் செய்யவேண்டும். இல்லையேல் உலக தொழில் துறைகளுடன் போட்டியிடமுடியாது. எனினும், பாடசாலை நேரத்தை அதிகரித்தமைக்கு கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
மேலதிக நேரத்துக்குத் தேவையான சாப்பாட்டையும் போக்குவரத்தையும் ஏற்படுத்தித் தரமுடியுமா? என வினவியுள்ளனர். ஆனால், மேலதிக வகுப்புகளை நடத்தும்போது, ஆசிரியர்கள் பலரும் இவற்றை மறந்துவிடுகின்றனர்.
45 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
47 minute ago
1 hours ago