2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை

R.Tharaniya   / 2025 ஜூன் 09 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம், சுதந்திர தினம், வெசாக் மற்றும் பொசன் ஆகிய தினங்களில் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவார். சிறிய குற்றங்களைப் புரிந்தவர்கள், வயதானவர்கள் மற்றும் சிறிய தண்டப்பணத்தை செலுத்த முடியாதவர்களுக்கே பொது மன்னிப்பு வழங்கப்படும்.

மன்னிப்பு வழங்கப்பட வேண்டியவர்கள் பலரும் இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கப் பலாக்காய் அல்லது தேங்காய் பறித்த பலரும் சிறையில் வாடுகின்றனர்.

நூறு ரூபாய் அபராதம் செலுத்த முடியாதவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், மில்லியன் கணக்கான வரிப் பணத்தை மோசடி செய்தவர்கள் சுதந்திரமாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

2025 பொசன் போயா தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், பல கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது. அந்த பட்டியலில் 388 பெயர்கள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில்,  அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்னவுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட இருப்பதான செய்தி, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எனினும், அவருடைய பெயர் பட்டியலில் இல்லையென்று விளக்கமளித்துள்ள ஜனாதிபதி செயலகம்,  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

 உதவியற்ற கைதிகளை விடுவிப்பது உண்மையில் ஒரு நல்ல விஷயம் என்றாலும், இந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அது முழு நாட்டையும் பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக மாறும், கடந்த கால ஜனாதிபதிகளால் வழங்கப்பட்ட ஒரு சில  பொது மன்னிப்பு கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

1978 அரசியலமைப்பின் படி, இலங்கையின் ஒரு நிறைவேற்று ஜனாதிபதி “ஒரு பெண்ணை ஒரு ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணை ஒரு ஆணாகவோ மாற்ற முடியாது” என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஒருமுறை கூறியுள்ளார்.

எனினும், கொலை, கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாதாள உலக குற்றவாளியான கோனாவாலா சுனில் ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மன்னிப்பு வழங்கினார். பின்னர் அவருக்கு தீவு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் சமாதான நீதவான் பட்டம் வழங்கப்பட்டது.இந்த விவகாரம் இன்றுமே விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றது.

ஊழல்,மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என ஆட்சிபீடம் ஏறியிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,  ஊழல் மோசடி குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கினால், ஜனாதிபதியின் பொது மன்னிப்பால் இன்றுமே விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் ஜனாதிபதி பட்டியலில் அனுரவும் இணைக்கப்படுவார். ஆகையால், இந்த விவகாரத்தின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுப்பதே ஆட்சிக்கு சிறந்து. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X