2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பிணி போக்கிட விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்

R.Tharaniya   / 2025 மே 28 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகிலிருந்து வறுமை மற்றும் பசி ஒழிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், 2024ஆம் ஆண்டில், 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 295 மில்லியன் மக்கள் கடுமையான அளவிலான பசியை அனுபவித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.7 மில்லியன் அதிகரிப்பைக் குறிக்கிறது, ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய பசியில் புதிய உச்சத்தை அறிவித்துள்ளது.

மோதல், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மை உள்ளிட்ட பல காரணிகள் பசியின்மை அதிகரிப்பிற்குப் பங்களிக்கின்றன. குறிப்பாக, மோதல் ஒரு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டது, இது 20 நாடுகளில் கிட்டத்தட்ட 
140 மில்லியன் மக்களைப் பாதித்தது, இதில் பேரழிவு தரும் அளவிலான உணவுப் பாதுகாப்பின்மை எதிர்கொள்ளும் பகுதிகள் அடங்கும்.

2024 உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலின் பிரகாரம், 20 நாடுகள் 5 புள்ளிக்குக் குறைவாகப்பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளன. 100 புள்ளியைப்பெற்று சோமாலியா 
127 ஆவது இடத்திலும் இலங்கை 56ஆவது இடத்திலும் உள்ளன.

நமது நாட்டின் வருமானம் மற்றும் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டால், இந்த இடம் திருப்திகரமாக இருக்கும் அளவுக்கு இல்லை என்று தோன்றுகிறது. 
ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தை எடை வளர்ச்சி, குழந்தை வளர்ச்சி குறைவு மற்றும் குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றை வைத்துத் தான் இந்த உலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

நம் நாட்டில் வறுமையையும் பசியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்பவர்கள் அல்லது அதற்கு முயற்சிப்பவர்கள் வறுமை மற்றும் வேலையின்மையால் அவதிப்படுபவர்கள் என பல்வேறு தரப்பினர் தொடர்பிலான தகவல்களும் வெளியாகியுள்ளன. சாப்பிட எதுவும் இல்லாததால்  எதையாவது சாப்பிடுவோரும் உள்ளனர். 

இலங்கையில் பொருளாதார மதிப்புள்ள ஒவ்வொரு தயாரிப்பு மற்றும் சேவையின் விலைகளும் அதிகரித்துள்ளன. விலை அதிகரிக்காத ஒரு பொருளைக் கண்டுபிடிப்பது, கடினமாகி விட்டதாகப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 

அரிசி, சர்க்கரை, பருப்பு, பால் மா, தேங்காய், எரிவாயு, காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களாகக் கருதப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளன. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், இந்த நாட்டில், சகித்துக்கொள்ளக்கூடியவர்களை விட அதிகமாக மதிக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை வாங்க முடியாத மக்கள், ஒரு நேரத்தில் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வாழ்க்கையை நடத்த முயற்சிக்கின்றனர். 

இதுபோன்ற சூழ்நிலையைத் தாங்க முடியாதவர்களைப் பற்றிப் பேசுவதற்கு யாரும் இல்லை. 
உலக பட்டினி தினமான இன்றைய தினம் பசி எனும் பிணி போக்கிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

அத்துடன், தேவைக்கு மட்டுமே உணவைச் சமைத்து முழுமையாகச் சாப்பிட்டு விட்டு, உணவுகள் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விழிப்புணர்வைக் குழந்தைப் பருவங்களில் இருந்து ஏற்படுத்தவேண்டும். இல்லையேல், 2030ஆம் ஆண்டுக்குள் உலகிலிருந்து வறுமை மற்றும் பசி ஒழிக்கப்படும் என்பதும்  கேள்விக்குறியாகிவிடும். 

28.05.2025


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X