Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 28 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் ‘எச்சரிக்கை’ செய்துள்ளது. செல்சியஸ் 39 க்கும் 45 க்கு இடைப்பட்ட நிலையை அடையும் போது, அது “ஆபத்து” நிலையை அடைகிறது. தற்போதைய மிகவும் வெப்பமான காலநிலையால், சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் மனித உடலைத் தாக்கும் அளவு அதிகரித்துள்ளது.
பழுப்பு நிற சருமம் கொண்ட இலங்கையர்கள் கூட தற்போது நிலவும் கடுமையான சூரிய ஒளியில் வெளிப்படும் போது உடலில் கடுமையான அசௌகரியத்தை அனுபவிக்கின்றனர். வெள்ளை நிற சருமம் உள்ளவர்கள் சூரிய ஒளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், பழுப்பு நிற சருமம் உள்ளவர்கள், வெளியே செல்லும்போது அதிகப்படியான சூரிய ஒளி காரணமாக அசௌகரியம் ஏற்பட்டால், அதிக நேரம் சூரிய ஒளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனித உடலுக்குத் தேவையான வைட்டமின் பெறும்போது சூரிய ஒளியை வெளிப்படுத்துவது குறித்து தற்போதைய சூழ்நிலையில் மிகுந்த கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும். “மனித உடலுக்குத் தேவையான தினசரி வைட்டமின் டி-யைப் பெற, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 20-25 நிமிடங்கள் வெயிலில் செலவிட வேண்டும் என்று பொதுவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய சூழ்நிலையில், ஒருவர் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சூரிய ஒளியின் தீவிரம் காரணமாக, தினசரி தேவையான வைட்டமின் டி-யைப் பெற குறைந்தபட்சம்
10 நிமிடங்கள் வெளியில் இருந்தால் போதும். யாராவது வெளியில் இருப்பது சங்கடமாக உணர்ந்தால், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியில் வேலை செய்யும் எவரும் சூரியனின் கதிர்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம்.நீங்கள் அதிக நேரம் வெளியில், வேலையில் அல்லது விளையாட்டுகளில் ஈடுபட்டால், நேரடி சூரிய ஒளி உங்கள் உடலில் படுவதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். சூரியக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்கள் உடலை மறைக்கும் லேசான ஆடைகளை அணிவது மிகவும் எளிதான ஒன்றாகக் கருதப்படலாம்.
வெளியில் பயணம் செய்யும்போது குடையைப் பயன்படுத்துவதும், உங்கள் முகத்தையும் தலையையும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கத் தொப்பியைப் பயன்படுத்துவதும் இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மிகவும் உதவியாக இருக்கும்.
சுற்றுச்சூழலில் அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பம் காரணமாக, மனித உடலில் இருந்து வியர்வை ஆவியாதல் தாமதமாகிறது, இதன் விளைவாக இந்த நேரத்தில் சிறு குழந்தைகளின் தோலில் வியர்வை கொப்புளங்கள் ஏற்படுகின்றன ஆகையால், இக்காலத்தில், வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும்.
2025.03.28
8 hours ago
15 Oct 2025
15 Oct 2025
15 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Oct 2025
15 Oct 2025
15 Oct 2025