R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு தொழிலுக்குச் சென்று, சுயதொழிலை நடத்தி, வியாபாரத்தில் ஈடுபட்டு, பணத்தை திரட்டுவதை விடவும் ஊழல் மோசடியின் ஊடாக, பணத்தை மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் முறைகளும் அதிகரித்துள்ளன. அதில், வாட்ஸ்அப் கணக்கை முடக்கி (ஹேக்செய்து) அதனூடாக, வாட்ஸ்அப் கணக்கில் இருக்கும் நண்பர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்பி மோசடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
நான், உங்களிடம் ஒரு உதவியை கோருகின்றேன். தனது வங்கிக் கணக்குக்கு ஒரு இலட்சம் ரூபாயை அவசரமாக வைப்பிலிடவும், நாளை காலையில் மீள வைப்பிலிடுவேன் என அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
வாட்ஸ்அப் கணக்கை வைத்திருப்பவர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், அலுவலகத்தில் இருப்பவர்களை மட்டுமே குழுவாக இணைத்திருப்பார்கள், வெளிநபர்கள் இருக்கமாட்டார்கள்.
இந்நிலையில், இந்த குறுஞ்செய்தியை பார்த்தவுடன், நண்பர்கள், வங்கிக்கணக்கு பணத்தை வைப்பிலிட்டு ஏமாந்து விடுவார்கள்.தனது நண்பர்களின் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து மேலே குறிப்பிட்டதைப் போல, உதவித்தொகை கேட்டு ஏதாவது குறுஞ்செய்தி வந்தால், தனது நண்பனுக்கோ, நண்பிக்கோ சாதாரண தொலைபேசி அழைப்பை எடுத்து, தீர விசாரித்த பின்னர், ஒரு முடிவை எடுக்கவேண்டும்.
வாட்ஸ்அப் புதிய மோசடி தடுப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், பயனர்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது, எடுத்துக்காட்டாக, அவர்களின் தொலைபேசி தொடர்பு பட்டியலில் இல்லாத ஒருவர் குழு அரட்டையில் சேரும்போது,
வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்ய அல்லது போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற மோசடிகளை ஊக்குவிக்கும் குழு அரட்டைகளுடன் பயனர்களை இணைக்க குற்றவாளிகள் பயன்படுத்தும் மிகவும் பொதுவான தந்திரோபாயத்தை முறியடிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இலங்கையில், இந்த மோசடி தற்போது அதிகரித்துள்ளது. ஆகையால், வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் மிக விளிப்பாக இருக்கவேண்டும். இல்லையேல் இழந்த பணத்தை மீளவும் திருப்பி பெற முடியாது. சிலவேளையில், சர்வதேச மோசடி வலையமைப்பின் ஊடாகவும் பணம் மோசடி செய்யப்படுகின்றது.
பொதுவாக, மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்கள் அல்லது தனியார் செய்தியிடல் செயலிகளில் உரையாடல்களை உருவாக்குவதற்கு முன்பு குறுஞ்செய்தி மூலம் தங்கள் இலக்குகளுடன் இணைகிறார்கள் என்று இந்த மோசடிகள் பொதுவாக பணம் செலுத்துதல் அல்லது கிரிப்டோகரன்சி தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையில் மட்டுமன்றி, மியன்மார், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சைபர் கிரைம் மையங்கள் பில்லியன் கணக்கான டொலர்களை மக்களை ஏமாற்றுவதாக அறியப்படுகிறது.
இந்த மையங்கள் வேலைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கும் பெயர் பெற்றவை, பின்னர் அவை மோசடி செய்ய நிர்பந்திக்கப்படுகின்றன.
அப்பகுதியிலுள்ள அதிகாரிகள், சாத்தியமான மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்படாமல் பாதுகாக்க வாட்ஸ்அப்பின் இரண்டு-படி சரிபார்ப்பு அம்சம் போன்ற மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும் மக்களை வலியுறுத்துகின்றனர்.
19 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago