2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

32 வது வருட ஐயப்ப மண்டல பூர்த்தி விழா

Janu   / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்புமிக்க மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 32 வது வருட மண்டல பூர்த்தி விழா மற்றும் ஸ்ரீ ஐயப்ப யாத்திரீகர்கள் நடாத்தும் மகா சக்தி பூஜை பெருவிழா சனிக்கிழமை (27) அன்று சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

நிகழும் குரோதி வருடம் மார்கழித் திங்கள் 12ம் நாள்  சனிக்கிழமை (27) காலை 8.00 மணி முதல் சபரிமலை ஸ்ரீ பம்பா கணபதியை நினைவு கூறும் வகையில் குழந்தையுள்ளம் கொண்ட அன்னதான பிரபுவுக்கு சக்தி பூஜை பெருவிழா, அன்னதானம் என்பன வெகு விமர்சையாக நடைபெற்றிருந்தது. 

காலை 10.00 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு விசேட திரவிய அபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு விசேட அபிஷேகத்துடன் யாத்திரை மேற்கொள்ளவிருக்கும் சுவாமிகள் நடாத்தும் விசேட பஜனையும், சக்தி பூஜையின் 18ம் படி பூஜையும் நிறைவடைந்த பின்னர் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த மண்டல பூர்த்தி பூஜை வழிபாட்டு நிகழ்வில், மஸ்கெலியாவின் மூத்த குருசுவாமி செல்வக்குமார் சுவாமி மற்றும் குருசுவாமிகளான சந்திரசேகரன், சந்திரகுமார், சக்தி, சண்முகா சுவாமி உட்பட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் பூஜையை சிறப்பித்தனர். 

செ.தி. பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X