2025 ஜூன் 14, சனிக்கிழமை

அம்பாரவேல் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

R.Tharaniya   / 2025 மே 12 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாந்தைமேற்குபிரதேசசெயலாளர் பிரிவில் அமைந்து அருள்பாலித்து வரும்அம்பாரவேல் பிள்ளையார் ஆலயமகோற்சவத்தின் முதலாவது தேர்திருவிழா  ஞாயிற்றுக்கிழமை (11)  அன்று காலை ஆரம்பமாகியது  சிறப்பாக நடைபெற்றது.

அம்பாரவேல் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர்சந்திரலிங்கம் விமலச்சந்திரன் ஒழுங்கமைப்பில்  இரணைமடு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் சர்வபோதகம் சிவஸ்ரீசிதம்பரேஸ்வர குருக்கள் தலைமையில்  நடைபெற்றது.

இதுவரைகாலமும் அலங்கார உற்சவமாக  நடைபெற்று வந்ததிருவிழாக்கள் கடந்தசனிக்கிழமை கொடியேற்றத்துடன்  மகோற்சவத் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.

அதற்கமைய அம்பாரவேல் பிள்ளையார் ஆலயத்தின் முதலாவது தேர்திருவிழா  யானை ஊர்வலத்துடன் மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .