Freelancer / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் முதலாவது வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம்(26) புதன்கிழமை சிறப்பாக ஆரம்பமாகியது .
உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று (27) வியாழக்கிழமை கல்முனை மேற்கு தமிழ் மக்களின் இரண்டாம் நாள் திருவிழா நடைபெற்றதுடன் இன்று (28) வெள்ளிக்கிழமை நிந்தவூர் அட்டப்பள்ளம் மக்களின் மூன்றாம் நாள் திருவிழா நடைபெறும். நாளை(29) சனிக்கிழமை காரைதீவு மக்களின் நான்காவது நாள் திருவிழா நடைபெறும்





18 minute ago
25 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
35 minute ago
42 minute ago