2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எண்ணெய் காப்பு சாத்துதலுடன் கும்பாபிஷேகம் ஆரம்பம்

Editorial   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்றையதினம்(7) வியாழக்கிழமை வேப்பஞ்சாறுடன் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 7 மணி முதல்  நிகழ்வு  இடம் பெற்றதோடு,

நாளைய தினம் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.19 மணி முதல் 10.41மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம் பெற இருக்கின்றது.

 தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 20ஆம் திகதி 1008 சங்குகளுடன் கூடிய சங்காபிஷேகம் இடம்பெறும் .

வி.ரி. சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .