2026 மே 02, சனிக்கிழமை

ஏழாம் திருவிழா

Freelancer   / 2023 செப்டெம்பர் 21 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவத்தின் ஏழாம் திருவிழா   நேற்றையதினம் (20) மாலை  5:15 மணியளவில் வசந்த மண்டப பூசைளுடன்  ஆரம்பமாகி வல்லிபுர ஆழ்வார் வெளிவீதி வந்தார்.

கடந்த ஆறு நாட்களாக உள்வீதியில் வலம்வந்த வல்லிபுர ஆழ்வார் நேற்றையதினம் வெளிவீதி வலம் வந்தார்.

ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் இடம் பெற்ற திருவிழாவில்  வடமராட்சி இளைஞர்களால் பாரம்பரிய மரபுக் கலையான சிலம்பம் மற்றும் தீப்பந்த சிலம்பம் என்பன இடம் பெற்றன.

இதற்கமைய திருவிழாவில் வடமராட்சியுன் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  அடியார்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .