Janu / 2025 ஜனவரி 05 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுக சூரசம்ஹார உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விநாயகர் விரதத்தின் 20 ம் நாளான சனிக்கிழமை (04) பி.ப 3.30 மணிக்கு அபிஷேகத்துடன் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து விசேட ஹோம பூசைகள், வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றதுடன் மாலை கஜமுகசங்காரம் நடைபெற்றது.
இதன்போது பாரம்பரிய மானாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், சிலம்பம், பொய்க்கால் நடனம், மற்றும் கரகம் என்பன நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசம்ஹாரத்தை கண்டுகளித்ததுடன், விநாயகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
பு.கஜிந்தன்












4 minute ago
20 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
31 minute ago
1 hours ago