R.Tharaniya / 2025 ஜூன் 08 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு , கட்டைபறிச்சான் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (08) அன்று காலை சுபவேளையில் சேனையூர் ஸ்ரீ வருண குல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து.
பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ அ . அரசரெத்தினம் அவர்களினால் கையேற்கப்பட்டு பொங்கல் பெருவிழா இடம் பெற்றது.
வேளை நூல் கட்டுதல், பொங்கல் சாடி வைத்தல், பால் பழப்பூசை,சிவலிங்க நாகதம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர் வார்க்கும் நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்று நிறைவாக விசேட தீ பாராதனைகளுடன் பூசை இடம்பெற்று,
ஸ்ரீமகாவிஷ்ணு ஆறுமுகவேல் சகிதம் அம்பாள் திரு உலா வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தாள்.







ஹஸ்பர் ஏ.எச்
3 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago