2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தீமிதிப்பு மகோற்சவம் ஆரம்பம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ் குறிச்சி ஸ்ரீ பத்ரகாளிஅம்பாள் ஆலய தீமிதிப்பு மற்றும் வருடாந்த அலங்கார உற்சவம் இன்று(5) வியாழக்கிமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ச்சியாக 10 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று எதிர்வரும் (15) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீமிதிப்பு  வைபவத்துடன் நிறைவடையும் என ஆலய பரிபாலன சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் (08)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாற்குடபவனி இடம் பெறவுள்ளது,

15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் ஆலயத்திற்கு சொந்தமான மாவடி வளவில் மஞ்சள் குளித்து பின்பு ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்து தீமிதிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .