2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

மீனாட்சி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் ...

R.Tharaniya   / 2025 மே 14 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் திங்கட்கிழமை (12)  சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பாக நடைபெற்றது.

ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன சர்மாவின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம்பெற்று நிறைவடைந்தன.

ஆலயத்தின் தலைவர் கி.ஜெயசிறில் ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கும்பங்கள் தாங்க மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து கடற்கரையை அடைந்து தீர்த்தம் இடம்பெற்றது.

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் திங்கட்கிழமை (12)  சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பாக நடைபெற்றது.

 வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .