R.Tharaniya / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் கிழக்கு , சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தில் பால்குட பவனி திங்கட்கிழமை (01) அன்று காலை இடம்பெற்றது.
சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தில் கடந்த 7 ஆம் மாதம் 16 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடந்த கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று இறுதியாக பால்குட பவனி நடைபெற்றது.
பால்குட பவனியானது கட்டைபறிச்சான் கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.
அதன் பின்னர் சேனையூர் வருண குல விநாயகர் ஆலயத்தில் 1008 சங்கில் சங்காபிஷேகமும் இடம்பெற்றது.
பால்குடப் பவனி யில் மூதூர் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








அ . அச்சுதன்
35 minute ago
39 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
44 minute ago
53 minute ago