2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சாரதாதேவியார் திருக்கோயில் கும்பாபிஷேகம்

R.Tharaniya   / 2025 ஜூலை 07 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் திருக்கோயில் புனராவர்த்தன கும்பாபிஷேகம்  ஞாயிற்றுக்கிழமை (6) அன்று சிறப்பாக நடைபெற்றது. 

40 வருடங்களின் பின் நடைபெற்ற இக் கும்பாபிஷேகத்தில் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி  அக்சராத்மானந்தா ஜீ மகராஜ்  முக்கிய பிரதானியாக கலந்து சிறப்பித்தார்.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ சுவாமி உமாதீசானந்தா ஜீ ஆகியோருடன் மிஷன் அபிமானிகள் கலந்து சிறப்பித்தார்கள்.

அன்னை சாரதா தேவியார் திருக்கோயில் 1982 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு1985 ஜூன் மாதம் மாதத்தில் முதலாவது கும்பாபிஷேகம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வி.ரி. சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .