2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

110 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 11 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி  டோஸ்களின் எண்ணிக்கை, 110 கோடியைக் கடந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில், கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நேற்று இரவு 7:00 மணி நிலவரப்படி, மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, 110கோடியே 21இலட்ச்சத்தைக்  கடந்தது. இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த மக்கள் தொகையில், 79.2 சதவீதம் பேருக்கு, ஒரு டோஸ் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது; 37 சதவீதம் பேருக்கு, இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பூஸ்டர்டோஸ் எனப்படும் கூடுதல் தடுப்பூசி போடுவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா நேற்று கூறியதாவது: கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்கென கால அவகாசம் உள்ளது.

இரண்டாவது டோஸ் செலுத்தியதில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .