Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 11 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, 110 கோடியைக் கடந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. நேற்று இரவு 7:00 மணி நிலவரப்படி, மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, 110கோடியே 21இலட்ச்சத்தைக் கடந்தது. இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த மக்கள் தொகையில், 79.2 சதவீதம் பேருக்கு, ஒரு டோஸ் மட்டும் செலுத்தப்பட்டுள்ளது; 37 சதவீதம் பேருக்கு, இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பூஸ்டர்டோஸ் எனப்படும் கூடுதல் தடுப்பூசி போடுவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா நேற்று கூறியதாவது: கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்கென கால அவகாசம் உள்ளது.
இரண்டாவது டோஸ் செலுத்தியதில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் பூஸ்டர் டோஸை செலுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago