2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆழ்துளைக்குள் விழுந்த சிறுவன்

Freelancer   / 2022 மே 23 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஞ்சாப் மாநிலம், ஷோஷியார்பூர் அருகே கியாலா கிராமத்திலுள்ள வயலில் 6 வயதான விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த சில தெருநாய்கள் சிறுவனை  துரத்தியதனால்  நாய்களிடமிருந்து தப்பிக்க அந்த சிறுவன் ஓடியுள்ளான். 

அந்த வேளையில், சணல் பையால் மூடப்பட்டிருந்த 100 அடி ஆழ்துளை கிணற்றின் உள்ளே சிறுவன் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளான். 

நேற்று முன்தினம் (22) இடம்பெற்ற இந்த சம்பவத்தை கேள்வியுற்றதும்,  விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

சிறுவனுக்கு தொடர்ந்து ஒக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதோடு, மேலும் அவசர சேவைக்காக மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் காணப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .