2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

இன்று விண்ணில் பாயும் C 50 ரொக்கெட்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரோ தனது ஆராய்ச்சி பணிகளை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது நோய்ப்பரவல் குறைந்துள்ள காரணத்தினால் கடந்த மாதம் முதல் தனது ஆராய்ச்சி பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் மாதம் 7ஆம் திகதி பிஎஸ்எல்வி சி 49 ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதை தொடர்ந்து பிஎஸ்எல்வி சி 50 ரொக்கெட் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது விண்ணில் பாய்வதற்கு தயாராக உள்ளது. இன்று காலை 6:45 மணி அளவில் விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரம் சில மாற்றம் செய்யப்பட்டு இன்று பிற்பகலில் 3:41 மணிக்கு விண்ணில் இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இருக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .